சினிமா செய்திகள்
என்னம்மா இத நீ இருந்துள்ள செஞ்சிருக்கணும்? கோவை மாணவி குறித்து காமெடி நடிகை!
ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட கோவை மாணவி குறித்து கூறிய காமெடி நடிகர் ஒருவர் ’என்னம்மா இத நீ இருந்துள்ள செஞ்சிருக்கணும்? என்று தெரிவித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஆசிரியர் மிதுன் என்பவர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் ’யாரையும் சும்மா விடக்கூடாது’ என எழுதியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஆசிரியர் மிதுன் மற்றும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவை மாணவி தற்கொலை குறித்து பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகள் தங்களது டுவிட்டர் பக்கங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் காமெடி நடிகையும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஆரத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கொடுமை! சும்மா விடக்கூடாது! என்னம்மா நீ இத இருந்து இல்லை செஞ்சிருக்கணும்? என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தயவுசெய்து அனைத்து பெண்களுக்கும் ஒரு செய்தி! எனது அன்பு சகோதரிகளே! பெற்றோரிடமோ அல்லது நண்பர்களிடமோ ’வெளியே சொல்லுங்கள்’. அந்த முட்டாள்களை விட நீங்கள் அதிகமாக வாழ தகுதியானவர் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொடுமை ????
"யாரையும் சும்மா விடக்கூடாது"????????
என்னம்மா இத நீ இருந்துள்ள செஞ்சிருக்கணும்??
Pls girls my dear sisters " Say it out "to parents or friends ..you deserve to live more than those morons ..#justiceforpontharani— Actress – HarathiGanesh (@harathi_hahaha) November 14, 2021