சினிமா செய்திகள்
சென்னையில் துணை நடிகை தற்கொலை.. என்ன காரணம்?
சென்னை விருகம் பாக்கம் பகுதியில் இருக்கும் மல்லிகை அவன்யூவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த துணை நடிகை தீபா, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத் துறையினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
நடிகை தீபா அண்மையில் ரிலீஸ் ஆன வாய்தா படத்தில் நாயகியாகவும், விஷாலின் துப்பறிவாளன் மற்றும் பல படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
மேலும் சென்னையில் தங்கிக் கொண்டு நல்ல பட வாய்ப்புகளைத் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை மதியம் தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தீபாவின் வீட்டிலிருந்து அவரை தொடர்புகொள்ள முயன்ற போது அவர் அழைப்புகளை ஏற்கவில்லை. பின்னர் அவர்களது நண்பர்கள் உதவியுடன் இவரது வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொன்ன போது அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.
பின்னர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து விசாரித்து வருகின்றனர்.
தீபா தற்கொலைக்குக் காதல் தான் காரணம். நீண்ட காலமாகக் காதலித்து வந்ததும், அது கை கூடாததால் தற்கொலை செய்துகொள்வதாகவும், இதற்கு வேறு யாரும் காரணமில்லை என கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.