சினிமா செய்திகள்
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி மீது அதிருப்தி: என்ன செய்தார் தெரியுமா ஆலியாபட்?
இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி மீது அதிருப்தி அடைந்த நடிகை ஆலியா பட் செய்த காரியம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்திற்கு புரமோஷன் செய்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் வெளியான பிறகு ஆலியா பட்டின் காட்சிகள் மிகவும் குறைவாக இருந்தது என்பதும் படமாக்கப்பட்ட பல காட்சிகள் எடிட் செய்யப் பட்டதாகவும் தெரியவந்தது. ஒரு துணை நடிகை போல் ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே மிகப்பெரிய நடிகையான ஆலியா பட் இருந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
இதனால் எஸ்எஸ் ராஜமௌலி மீது கடும் அதிருப்தி அடைந்த ஆலியாபட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எஸ்.எஸ் ராஜமௌலியை அன்ஃபாலோ செய்தார். அது மட்டுமின்றி ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் தன்னுடைய காட்சிகள் அதிகமாக நீக்கப்பட்ட விரக்தியில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் தொடர்பாக சில பதிவுகளையும் அவர் டெலிட் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.