சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி உடன் நடிக்கும் போது அழுதேவிட்டேன்..! – மனம் திறந்த நடிகை அதிதி பாலன்
நடிகர் விஜய் சேதுபதி உடன் நடித்த போது அழுதேவிட்டேன் என நடிகை அதிதி பாலன் மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 12-ம் தேதி 4 இயக்குநர்களின் இயக்கத்தில் 4 கதைகளின் தொகுப்பாய் ‘குட்டி ஸ்டோரி’ என்னும் ஆந்தாலஜி படம் திரை அரங்கங்களில் வெளியானது. நான்கு கதைகளில் ஒரு கதையில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிகை அதிதி பாலனும் முன்னணிக் கதாபாத்திரங்களாக நடித்திருப்பர்.
தமிழில் ‘அருவி’ என்னும் திரைப்படம் மூலம் நாயகி ஆக அறிமுகம் ஆனவர் நடிகை அதிதி பாலன். சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிதி பாலன் நடித்து வெளியான திரைப்படம் தான் குட்டி ஸ்டோரி. இதிலும் நான்கில் ஒரு கதையில் நாயகி ஆக நடித்திருப்பார். விஜய் சேதுபதி உடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை அதிதி பாலன் சமீபத்தில் ஒரு பேட்டியில் விவரித்துள்ளார்.
அதிதி பாலன் கூறுகையில், “நடிகர் விஜய் சேதுபதி உடன் நடித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. நடிப்பு குறித்து அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். மூன்று ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிப்பதால் கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. ஒரு அழுகைக் காட்சி படம் எடுக்கப்பட்ட போது எனக்கு உண்மையிலேயே அழுதிவிட்டேன். பயத்தில் அழுகையே வந்துவிட்டது. ஆனால், விஜய் சேதுபதி எனக்கு நடிக்க வழிகாட்டினார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.