சினிமா செய்திகள்
இந்தியாவின் விமானப்படை தாக்குதலுக்கு நடிகர்கள் பாராட்டு!
![kamal rajni - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/02/kamal-rajni.jpg)
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது முகாமிட்டிருந்த தளத்தை இந்திய ராணுவப் படை இன்று அதிகாலை 3.30 மணிக்கு குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ராணுவப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் சுமார் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியாகி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் இந்த துரிதத் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த், பிராவோ என பாராட்டியுள்ளார். மேலும், நடிகர் கமல்ஹாசன், இந்திய வீரர்களின் சாகசத்துக்கு என்னுடைய சல்யூட் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பாகுபலி இயக்குநர் ராஜமெளலி மற்றும் ஜெயம் ரவி ஜெய் ஹிந்த் என்று பதிவிட்டு, இந்தியன் ஆர்ம்ட் ஃபோர்ஸசுக்கு டேக் செய்துள்ளனர்.
மேலும், நடிகர் சரத்குமார், நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஜூனியர் என்.டி.ஆர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் என பலரும் இந்திய விமானப்படையின் வீர செயலுக்கு பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.
தாக்குதல் நடந்த இடத்தை சர்வதேச மீடியாக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது வானிலை சரியில்லை என்றும் ஹெலிகாப்டர்கள் பறக்க உகந்த சூழல் ஏற்படும் போது அனுமதி அளிக்கப்படும் என்றும் மழுப்பியுள்ளார்.