தமிழ்நாடு
தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டை உடைக்க முயன்ற விஷால்.. கைது செய்த போலீஸ்!
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயற்சித்த காரணத்தால் நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விஷால் விலக வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கத்தில் சிலர் குரல் எழுப்பி வருகிறார்கள். சங்கத்தின் நிரந்தர வைப்புத் தொகையான 7 கோடி ரூபாயில் விஷால் முறைகேடு செய்து விட்டதாக 150க்கும் அதிகமான உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர், ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்ட முக்கிய தயாரிப்பாளர்கள் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
நேற்று இவர்கள் 150 பேரும் சேர்ந்து தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். அதேபோல் அண்ணா சாலையில் உள்ள இன்னொரு தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கும் பூட்டு போட்டனர். இதனால் நேற்று மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.