சினிமா செய்திகள்

விஜய் செலுத்த வேண்டிய சொகுசுக்கார் வரி: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

Published

on

தளபதி விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய் காருக்கு நுழைவு வரி செலுத்துவது குறித்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விசாரணையின்போது தளபதி விஜய் குறித்து நீதிபதி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாகவும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்தார் என்பதும் மேல்முறையீட்டு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் தான் இறக்குமதி செய்த வெளிநாட்டுக்காருக்கு நுழைவு வரி செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது விஜய் சொகுசு காருக்கான வரியை விஜய் செலுத்தி விட்டார் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version