தமிழ்நாடு
விஜய் தீவிரவாதியை போல மக்களை தூண்டுகிறார்.. அமைச்சர் சிவி சண்முகம் கடும் விமர்சனம்!
சென்னை: சர்கார் படம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்து இருக்கிறார். நடிகர் விஜய் தீவிரவாதியைப்போல மக்களிடம் வன்முறையை தூண்டுகிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சர்கார் படத்தை பற்றி அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
இவர்கள் படமும் எடுக்கிறேன் என்ற போர்வையில் அரசின் திட்டங்களின் பொருட்களை எரிப்பது மிக மிக தவறு. நடிகர் விஜய் தீவிரவாதியைப்போல மக்களை வன்முறைக்குத் தூண்டிவிட்டுள்ளார். வேண்டும் என்றே இவர்கள் இந்த செயலை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
அந்த படத்தில் நடித்த விஜய், படத்தை தயாரித்தவர் நிறுவனம், இயக்கியவர், திரையரங்க உரிமையாளர்கள் எல்லோரும் உத்தமர்கள் போல். இவர்கள் அனைவரின் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க சட்டத்துறை ஆலோசனை செய்து வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசுக்கு வலியுறுத்துவேன். இந்த நடிகருக்கு வெளிநாட்டு சத்தியாளர்களுடன் தொடர்பு உள்ளது. தமிழகத்தில் எந்த நலத்திட்டமும் செயல்படக் கூடாது என வெளிநாட்டு சதிக்கூட்டத்துடன் இவர்கள் சேர்ந்து செயல்படுகிறார்கள் என்று கடுமையாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.