சினிமா செய்திகள்

மகனை நினைத்து சோகத்தில் விஜய்.. ஏன்?

Published

on

கொரோனா பாதிப்பால் ஷூட்டிங் ஏதும் இல்லாததால், நடிகர் விஜய் வீட்டில் தான் உள்ளார்.

இவர் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கொரோனா பாதிப்பால், படம் வெளியாக முடியாமல் தள்ளிப்போகிறது. மாஸ்டர் படம் திரையரங்கத்தில் வெளியாகாது. டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், அது வதந்தி என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் படித்து வருகிறார். கொரோனா பாதிப்பால் அவரால் இந்தியா திரும்பி வரவில்லை. எனவே தனது மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நடிகர் விஜய் சோகத்தில் உள்ளாராம். இதைப் பிரபல நடிகரும், பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் உறுதி செய்துள்ளார்.

Trending

Exit mobile version