தமிழ்நாடு

விஜய் சைக்கிளில் வந்தது ஏன்? பப்ளிசிட்டியா? பெட்ரோல் விலையை குத்திக்காட்டவா?

Published

on

நடிகர் விஜய் இன்று நீலாங்கரையில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய் சைக்கிளில் வந்தது குறித்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை அடுத்தே அதனைக் மறைமுகமாக கண்டிக்கும் வகையில் விஜய் சைக்கிளில் வந்ததாக விஜய் ரசிகர்கள் பெருமையுடன் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆனால் விஜய் பப்ளிசிட்டியை விரும்பும் நபர் என்றும் அதனால் சைக்கிளில் சென்றால் தான் பலருடைய பார்வையில் தான் பாடுவோம் என்றும் பரபரப்பை ஏற்படுத்தலாம் என்பதற்காகவே அவர் சைக்கிளில் வந்ததாக நெட்டிசன்கள் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

மொத்தத்தில் விஜய் சைக்கிளில் வந்த விவகாரம் சமூகவலைதளங்களில் இரு தரப்புக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இன்றைய தொலைக்காட்சிகளில் விவாதம் நடந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version