சினிமா செய்திகள்
ஓடிடியில் தனுஷின் ரீமேக் படம்: ஆத்திரத்தில் கையை பிளேடால் அறுத்து கொண்ட ரசிகை!
தனுஷின் ரீமேக் படம் ஒன்று தெலுங்கில் உருவாகி நிலையில் அந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய கூடாது என ரசிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் அசுரன் என்பதும் இந்த படம் தற்போது தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடித்த இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.
இந்த படம் கடந்த மே 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதனை அடுத்து தற்போது ஓடிடியில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பு வெளிவந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ’நாரப்பா’ படத்தை நாங்கள் திரையரங்குகளில் தான் காண விரும்புகிறோம் என்று பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வெங்கடேஷின் தீவிரமான ரசிகை ஒருவர் திடீரென தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நாரப்பா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக கூடாது என்றும் திரையரங்குகளில் தான் நாங்கள் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்’ என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த வெங்கடேஷின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Narappa endhuku Andi ma Venkatesh Babu abhimanulu lo tho eppudu ela adukuntaru @SureshProdns abhimanam Chala vilavayinadhi please ???????????????????????????? we want Narappa movie only in theaters ???????????????? jai venky ???????????????????? pic.twitter.com/gJF1l7iHo4
— victory satish (@ganjerpalli) June 30, 2021