சினிமா

புது படத்துக்கு வந்த சோதனை!.. தயாரிப்பாளரை மிரட்டிய வடிவேலு!.. அடுத்த பஞ்சாயத்து!….

Published

on

நடிகர் வடிவேலு திரைப்படம் நடிக்க கடந்த சில ஆண்டுகளாக ரெட்கார்டு போடப்பட்டிருந்த நிலையில் தற்போது ரெட்கார்டு நீக்கப்பட்டுள்ளது.

நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட்கார்டு நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இது எனக்கு மறுபிறவி என்றும், மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவது முதன் முதலாக நான் வாய்ப்பு தேடி சென்ற போது கிடைத்த உணர்வு ஏற்பட்டுள்ளது என்றும் எனது ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றத்தை வைத்துள்ளதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்க சுராஜ் இயக்கத்தில் அவர் ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்று இதே தலைப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். அவர்கள் தலைப்பை முறைப்படி பதிவும் செய்து வைத்துள்ளனர்.

ஆனால், இந்த தலைப்பை தனக்கு தருமாறு ஏஜிஎஸ் நிறுவனத்திடம் வடிவேலு கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் மறுத்துவிட்டதாகவும், தலைப்பை தரவில்லை எனில், செய்தியாளர் சந்திப்பை நடத்தி என் படத்திற்கு ‘நாய் சேகர்’ என்கிற தலைப்பை அறிவிப்பேன் என வடிவேல் மிரட்டி வருகிறாராம்.

இந்த பஞ்சாயத்து எதில் முடியுமோ தெரியவிலை….

seithichurul

Trending

Exit mobile version