தமிழ்நாடு

‘ஸ்டாலினில் ஒரு கலைஞரைப் பார்க்கிறேன்!’- நடிகர் தியாகராஜன் பெருமிதம்

Published

on

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான தியாகராஜன் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அவருடன் அவரின் மகனும் நடிகருமான பிரசாந்தும் உடனிருந்தார்.

முதல்வரை சந்தித்தப் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த தியாகராஜன், ‘சிறப்பான ஓர் ஆட்சியைத் தந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மக்களுக்கு சிறப்பான பல திட்டங்களைக் கொண்டு வந்து அதைத் திறம்பட செயல்படுத்தியும் காட்டியுள்ளார்.

அவரின் செயல்பாடுகளில் நான் கலைஞரைத் தான் பார்க்கிறேன். அவரின் உழைப்பிலும் நான் கலைஞரைத் தான் பார்க்கிறேன். தொலை நோக்கு பார்வை கொண்டு கலைஞரைப் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்’ எனப் புகழ்ந்தார்.

பிரசாந்த் பேசுகையில், ‘ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே பெரும்பான்மை மக்கள் பயன்படும் வகையில் சிறப்பான பல்வேறு திட்டங்களை அவர் செயல்படுத்தி உள்ளார். அவரின் தலைமையின் கீழ் தமிழ்நாடு நிச்சயம் பல்வேறு சாதனைகளைப் புரியும், பல்வேறு சிகரங்களைத் தொடும் என்றும் நான் உண்மையில் நம்புகிறேன். அதற்கான சான்றாகவே இத்தனை நாள் ஆட்சி இருந்தது’ எனக் கூறிப் பெருமை பட்டார்.

seithichurul

Trending

Exit mobile version