தமிழ்நாடு

இந்த நேரத்தில் உங்கள் ஆட்சி நம்பிக்கை தருகிறது: முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து

Published

on

இந்த பேரிடர் நேரத்தில் உங்கள் ஆட்சி மிகுந்த நம்பிக்கையை தருகிறது என இன்று முதல்வராக பதவியேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழக முதல்வராக இன்று காலை 9 மணிக்கு முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்வராக பதவியேற்ற ஸ்டாலினுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன் நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

சுவாசிப்பதற்கு உயிர் காற்று கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்தப் பேரிடர் காலத்தில் நீங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சி அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம்

தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்’ என்று நடிகர் சூர்யா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version