சினிமா செய்திகள்

‘மாஸ்டர்’ ரிலீஸாவதற்கு முன்னரே லீக் ஆகும் என ‘அன்றே கணித்த சூர்யா’!

Published

on

நாளை உலகம் முழுவதும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம், சினிமா தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சுமார் ஒரு மணி நேர காட்சிகள், துண்டு துண்டாக நேற்று மாலை வாக்கில் கசிந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு, செய்வதறியாமல் தவித்து வருகிறது.

குறிப்பாக மாஸ்டர் படத்தை தயாரித்த எக்ஸ்.பி ஃபிலிம் கிரேயேட்டர்ஸ், ‘மாஸ்டர் படக்குழு, லீக் செய்யப்பட்ட வீடியோக்களை பகிரவோ, ஃபார்வர்டு செய்யவோ வேண்டாமென கேட்டுக் கொள்கிறது. உங்களிடம் அது போன்ற காட்சிகள் வரும் பட்சத்தில் report@blockxpiracy.com என்ற இணையதளம் மூலம் அதை எங்களிடம் பகிருங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் கஷ்டபட்டு மாஸ்டரை உங்களிடம் எடுத்து வந்திருக்கிறோம். நீங்கள் தியேட்டரில் வந்து படத்தைப் பார்த்து மகிழ்வீர்கள் என்கிற நம்பிக்கை மட்டுமே எங்களுக்கு இருக்கிறது. உங்களிடம் படத்தின் கசியவிடப்பட்ட காட்சிகள் வந்தால், அதை பகிர வேண்டாம். நன்றி. இன்னும் ஒரே நாளில் மாஸ்டர் உங்களுடையதாக ஆகும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ‘அயன்’ படத்தில் சூர்யா நடித்த காட்சி ஒன்று, இந்த சூழலை மையப்படுத்தி வைரலாக பரவி வருகிறது. அயன் படத்தில், வெளிநாட்டிலிருந்து திருட்டு சிடி கடத்தி வரும் சூர்யா, பிரபுவிடம் காரில் அதைக் காண்பிப்பார். அந்த சிடி-யில், ‘மாஸ்டர் காப்பி’ என்று எழுதப்பட்டிருக்கும். அந்தக் காட்சியின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்த பலரும், ‘அன்றே கணித்தார் சூர்யா’ என்று டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கொரோனா காலக்கட்டத்தில் சூர்யா, படத்தில் நடித்தப் பல காட்சிகள் உண்மையாக மாறின. அதை முன்வைத்து தான், ‘அன்றே கணித்தார் சூர்யா’ என்னும் டெம்பிளேட் பிரபலமானது. தற்போது மாஸ்டர் பட சிக்கலுக்கும் அந்த டெம்பிளேட் செட்டாகியுள்ளது.

 

Trending

Exit mobile version