தமிழ்நாடு

’மாமியார் மெச்சிய மருமகள்’ பட நடிகரின் வீட்டில் மாமியார்-மருமகள் குடுமிப்பிடி சண்டை!

Published

on

’மாமியார் மெச்சிய மருமகள்’ என்ற திரைப்படத்தில் நடித்த பழம்பெரும் நடிகரின் வீட்டில் மாமியார் மற்றும் மருமகள் இருவரும் குடுமிப்பிடி சண்டை போட்டு காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

பழம்பெரும் இலட்சிய நடிகர் என்ற புகழ்பெற்ற வரும் எஸ்எஸ் ராஜேந்திரன் என்பதும் இவரது வீடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறைந்த எஸ்எஸ் ராஜேந்திரன் வீட்டில் அவரது மகள் லட்சுமி தனது கணவர் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று திடீரென எஸ்எஸ் ராஜேந்திரன் மகள் மற்றும் அவரது மாமியார் இடையே சண்டை வந்ததாகவும் முதலில் வாய்ச்சண்டை ஆக இருந்தது அதன் பின்னர் திடீரென கைகலப்பாக மாறி ஒருவர் மீது ஒருவர் தலைமுடியை பிடித்துக்கொண்டு குடுமிப்பிடி சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அடுத்து இந்த இரண்டு புகார்கள் மீது காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

’மாமியார் மெச்சிய மருமகள்’ என்ற திரைப்படத்தில் நடித்து பெண்களின் மனதை கவர்ந்த எஸ்.எஸ். இராஜேந்திரனின் வீட்டிலேயே மாமியார் மருமகள் குடுமிப்பிடி சண்டை நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending

Exit mobile version