சினிமா

திடீரென மயங்கி விழுந்த பவர்ஸ்டார் சீனிவாசன்.. ரசிகர்கள் அதிர்ச்சி…

Published

on

லத்திகா திரைப்படம் மூலம் நடிகரானாவர் சீனிவாசன். நெகட்டிவ் பப்ளிசிட்டி காரணமாக இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின், சந்தானத்துடன் இணைந்து இவர் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படம் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

அதேநேரம், சில மோசடி வழக்குகளிலும் சிக்கினார். வங்கியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று இவர் மோசடி செய்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. சில சொக் மோசடி வழக்கும் இவர் மீது தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே, இவரின் திரை வாழ்க்கை சூன்யமானது. நடிப்பில் ஒரு இடைவெளி விழுந்தது.

சில வருடங்கள் கழித்து பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக ‘பிக்கப்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், படப்பிடிப்பில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version