சினிமா செய்திகள்

விவசாயிகளின் விருது சிவகார்த்திகேயனுக்கே..!- நம்மாழ்வார் நினைவு நாளில் கவுரவம்

Published

on

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நம்மாழ்வார் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழாவில் ஆண்டுதோறும் உயரிய நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இந்தாண்டு அந்த விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விவசாயம் சார்ந்த பல பரப்புரைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திய நெல் ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த போது அவருக்கான முழு மருத்துவ செலவையும் நடிகை சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டிருந்துள்ளார். மேலும், நெல் ஜெயராமனின் மகன் கல்விக்காகும் அத்தனை செலவுகளையும் ஏற்று தொடர்ந்து உதவியும் செய்து வருகிறார்.

விவசாயி ஒருவருக்கு உதவி செய்து தொடர்ந்து பல உதவிகளையும் செய்து வருவதால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நம்மாழ்வார் விருது வழங்கி கவுரவிக்க முடிவு செய்துள்ளது. மறைந்த நம்மாழ்வாரின் 7-ம் ஆண்டு நினைவு நாள் இன்று டிசம்பர் 30-ம் தேது அனுசரிக்கப்படுவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version