சினிமா

தாறுமாறாக சம்பளத்தை ஏற்றிய சிவகார்த்திகேயன்…காரணம் இதுதானாம்!…

Published

on

துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் ஹீரோவாக மாறியவர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியவர். தனுஷ் தயாரிப்பில் உருவான ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் அவரின் திரை வாழ்வை மாற்றியது.

அதன்பின் அவர் நடித்த ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் அவரின் மார்கெட் மேலே சென்றது. அதன்பின் ரெமோ உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்தார். சில படங்களை அவரே தயாரித்தார்.

தற்போது சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ஏற்றியுள்ளார். இதுவரை ரூ.25 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் தற்போது ரூ.5 கோடி உயர்த்தி ரூ.30 கோடி ஆக்கியுள்ளார். இதற்கு காரணம் டாக்டர் படம்தானாம். டாக்டர் திரைப்படம் தமிழகத்தின் எல்லா ஏரியாக்களிலும் நல்ல விலைக்கு வியாபாரம் ஆகியுள்ளது. எனவேதான், சிவகார்த்திகேயன் இந்த முடிவுக்கு காரணம் எனக்கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் ரூ.15 கோடியும் மற்றும் சிம்பு ரூ.12 கோடியும் சம்பளம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version