சினிமா
இனிமே என்னை வேற மாதிரி பார்ப்பீங்க!.. நடிகர் சிம்பு பேட்டி….
![simbu3 - Bhoomitoday simbu](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/simbu3.jpg)
நடிகர் சிம்புவையும் சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது. ஒழுங்காக படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என்கிற கெட்டப்பெயர் அவருக்கு பல வருடங்களாகவே உண்டு. தற்போது ஒரு வழியாக தன்ன கொஞ்சம் மாற்றிகொண்டு நல்ல பிள்ளையாக ஈஸ்வரன் மற்றும் மாநாடு படங்களில் நடித்து கொடுத்தார். ஆனாலும், அவ்வப்போது அவருக்குள் இருக்கும் குணம் மேலே வந்துவிடும். அதன் விளைவுதான் மாநாடு படத்தின் வெற்றி விழாவில் அவர் கலந்து கொள்ளாமல் போனது.
மாநாடு படம் ரிலீஸாகி மெகா வெற்றி பெற்ற நிலையில், அந்த உற்சாகத்துடன் அவர் கௌதம் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். சிம்பு இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படம் தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ஆச்சர்யத்தை கொடுத்தது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த சிம்பு ‘இதற்கு முன் செய்தவற்றையே நான் திரும்ப செய்தால் ரசிகர்கள் என்னை ஒதுக்கிவிடுவார்கள். எனவே, சினிமாத் துறையில் நீடிக்க நான் வித்தியாசமாக நான் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். வெந்து தணிந்தது காடு படத்தில் வேறு மாதிரியான புதிய சிம்புவை நிச்சயம் நீங்கள் பார்ப்பீர்கள்’ என அவர் தெரிவித்துள்ளார்.