தமிழ்நாடு

சிம்பு கார் மோதி முதியவர் பலி: காரில் சிம்பு இருந்தாரா?

Published

on

நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் ஒருவர் பலியானதை அடுத்து அந்த காரில் சிம்பு இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 18ஆம் தேதி தேனாம்பேட்டை இளங்கோ நகர் பகுதியில் சிம்புவின் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென முதியவர் ஒருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த முதியவர் பலியானார்.

இந்த நிலையில் கார் டிரைவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது அந்த காருக்கு சொந்தக்காரர் சிம்பு என்பது தெரியவந்தது. மேலும் டிரைவர் செல்வத்தை கைது செய்த போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கார் மோதி பலியான முதியவர் அந்த பகுதியில் உள்ள காவலர் பணி செய்து கொண்டிருப்பதாகவும் அவரது பெயர் முனுசாமி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த கார் முதியவர் மீது மோதும் போது காரில் சிம்பு அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாராவது காரில் இருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version