சினிமா செய்திகள்

நடிகர் செந்தில் குடும்பத்தினர்களுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

Published

on

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நடிகர் செந்திலின் குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நடிகர் செந்தில் அவரது மனைவி. மகன். மற்றும் மருமகள் ஆகிய நால்வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர்கள் நால்வரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version