சினிமா

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

Published

on

எங்கேயும் எப்போதும் படத்தில் எதிர்பாராதது போல விபத்து ஏற்படுவது போல அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சர்வானந்துக்கும் கடந்த வாரம் விபத்து ஏற்பட்டது. ஒரே வாரத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படி ஆகி விட்டதே என குடும்பத்தினர் முதல் ரசிகர்க்ள் வரை பதறிய நிலையில், அதெல்லாம் ஒன்றுமில்லை என நேற்று இரவு கோலாகலமாக தனது திருமணத்தை முடித்துள்ளார் சர்வானந்த்.

ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்ட அரண்மனைகளில் தான் சினிமா நடிகர்கள் பலர் ராயல் வெட்டிங் செய்துக் கொள்கின்றனர்.

#image_title

இந்நிலையில், நடிகர் சர்வானந்த் மற்றும அவரது நீண்ட நாள் காதலி ரக்‌ஷிதா ரெட்டி இருவரும் திருமணம் செய்துக் கொண்டு இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

டோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் சர்வானந்துக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நாளை நமதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கிய எங்கேயும் எப்போதும் படம் தான் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலமாக்கியது.

சேரன் இயக்கிய ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் இவர் நடித்திருந்தார். அமலா அக்கினினியுடன் இவர் இணைந்து நடித்த கணம் திரைப்படம் கடந்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பைலிங்குவல் படமாக வெளியானது.

 

seithichurul

Trending

Exit mobile version