சினிமா

கொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் சரத்குமார்..!- மகள் வரலட்சுமி உருக்கம்

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த நடிகர் சரத்குமார் நலமுடன் வீட்டுக்கு வந்துள்ளார் என அவரது மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான அப்பா 10 நாட்களுக்குத் தன்னை தனிமைப்படுத்தி வைத்துக்கொண்டார். டாக்டர்களின் உரிய அக்கறை மற்றும் ஆலோசனையினால் தற்போது உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்துவிட்டார்.

அடுத்த 15 நாட்களுக்கு அப்பா இன்னும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த ஓய்வு அவர் மீண்டும் சிறந்த உடல் பலமுடன் திரும்ப உதவும். இன்னும் கொரோனா அபாயம் குறையவில்லை என்பதால் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version