கேலரி
நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம் – அசத்தலான புகைப்படங்கள் உள்ளே!
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து குணச்சித்திர நடிகையாக மாறியவர் சரண்யா பொன்வண்ணன். இன்னசண்டான அம்மா வேடம் என்றாலே அவர்தான் நினைவுக்கு வருவார். தென்மேற்கு பருவாக்காற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர்.
பொன்வண்ணன் – சரண்யா தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்தவர் பிரியதர்ஷினிக்கு விக்னேஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று அவர்களுக்கு மணப்பாக்கத்தில் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திரைபிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்களுக்கு மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக்கூடையை முதல்வர் பரிசாக கொடுத்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.