சினிமா செய்திகள்
பைக் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்: அப்பல்லோவில் அனுமதி!
பிரபல நடிகர் ஒருவர் பைக் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மருமகனுமான சாய் தரன் தேஜ் நேற்று இரவு ஹைதராபாத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வெளிநாட்டு கார் ஒன்று அவருடைய பைக்கை உரசிக் கொண்டு சென்றதாக தெரிகிறது. இதனால் திடீரென தடுமாறிய சாய் தரன் தேஜ் கீழே விழுந்தார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயம் இல்லை. இருப்பினும் கை, முகம், இடுப்பு ஆகிய இடங்களில் சின்ன சின்ன சிராய்ப்புகள் மட்டும் இருந்ததாக தெரிகிறது
மேலும் விபத்தில் சிக்கிய சாய் தரன் தேஜ் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும் அதன்பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பைக் விபத்து குறித்து கேள்விப்பட்ட பவன் கல்யாண் மற்றும் அவருடைய உறவினர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தனர்.சிரஞ்சீவி மற்றும் அவருடைய மனைவியும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது
இந்த நிலையில் சாய் தரன் தேஜ் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ’சாய் தரன் தேஜ் நன்றாக இருக்கிறார் என்றும் உடல் நலம் தேறி வருவதாகவும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் அதனால் யாரும் கவலைப்பட தேவையில்லை என்றும் கூறினார்
மேலும் அவரது ரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவர் மது அருந்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்