சினிமா செய்திகள்
20 ஆண்டுகளுக்குப் பின் சூர்யா உடன் இணையும் ராஜ்கிரண்..!
நடிகர் சூர்யா-வின் 40-வது திரைப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் இணைந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் நந்தா படத்தில் மிரட்டிய கூட்டணியினர் மீண்டும் சூர்யா 40 படத்துக்காக இணைந்துள்ளனர்.
சூர்யாவின் 40-வது படத்துக்கு கத்திக்குத்தி என தலைப்பு வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். பசங்க 2 படத்துக்குப் பின் இந்தப் புதிய படத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை. இந்தப் படம் பெரிய ஹிட் என்பதால் அவரது அடுத்தப் படமான சூர்யா 40 கிராமத்துக் கதை உடன் பெரிய ஹிட் ஆக வாய்ப்பு உள்ளதாக சூர்யா ரசிகர்கள் சமுக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.