சினிமா செய்திகள்

லைகா நிறுவனத்திடம் ரஜினிகாந்த் வைத்த கோரிக்கை!

Published

on

தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் லைகா நிறுவனம் தயாரிப்பில் ‘லால் சலாம்’ மற்றும் இதற்கடுத்து ‘ஜெய்பீம்’ படம் இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கு முன்பு, ‘தர்பார்’, ‘2.0’ ஆகிய படங்களும் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா தயாரித்திருந்தது. இதற்கு முன்பு கே. பாலச்சந்தர் மீதுள்ள மரியாதை காரணமாக ‘குசேலன்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த். அதில் அவருக்கு சிறப்புத் தோற்றம் மட்டுமே!

படத்தின் கதாநாயகன் பசுபதி. ஆனால், அந்தப் படத்தை ரஜினிகாந்தை முன்வைத்தே விளம்பரப்படுத்தி பின்பு படம் வெளியாகி பெரும் நஷ்டத்தை சந்தித்தது. பிறகு அந்த நஷ்டத்தை ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்டார்.

இதனை மனதில் வைத்தே ‘லால் சலாம்’ படத்தில் தன்னை முன் வைத்து விளம்பரம் பெரிய அளவில் செய்ய வேண்டாம் எனத் தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஏனெனில், இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர்தான் கதாநாயகர்கள்.

இதில், அவருடைய சிறப்பு தோற்றத்திற்கான படப்பிடிப்பு வெறும் பத்து நாட்களுக்குள் முடிந்துவிடக்கூடிய அளவுக்கு மிகக் குறைவான நேரமே வருகிறது. இதனால் தன்னை முன்வைத்து பெரிய அளவில் விளம்பரம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கையை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்தால் எவ்வளவு சம்பளம் வாங்குவாரோ அதில் ஒரு பகுதி மட்டுமே ‘லால் சலாம்’ படத்திற்கும் ரஜினிகாந்த் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை லைகா தரப்பு ஏற்குமா அல்லது படத்திற்கான விளம்பரங்கள் எப்படி செய்ய இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version