தமிழ்நாடு
அதிமுகவில் மீண்டும் இணைந்தார் நடிகர் ராதாரவி!
நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து விலகியநிலையில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
நடிகர் ராதாரவி முன்னர் அதிமுகவில் இருந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் குழப்பம் ஏற்பட அவர் திமுகவுக்கு தாவினார். இதனையடுத்து மேடைதோறும் அதிமுகவை விமர்சித்து வந்தார். இந்நிலையில் கொலையுதிர் காலம் திரைப்பட டிரைலர் வெளீயிட்டு விழாவில் கலந்துகொண்ட ராதாரவி நயன்தாரா மற்றும் நடிகைகளை சர்ச்சைக்குறிய வகையில் பேசினார்.
இது வைரலாக பரவ விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனையடுத்து ராதாரவியின் பேச்சுக்கு பலரும் எதிர்வினையாற்றினர். இந்நிலையில் ராதாரவியை திமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர். ராதாரவியும் தான் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.