சினிமா செய்திகள்

தமிழில் விஷால், மலையாளத்தில் ப்ரித்விராஜ்… கே.ஜி.எஃப்-2 படத்தைக் கைப்பற்றிய பிரபலங்கள்!

Published

on

கன்னட மொழியில் உருவாகி கடந்த 2018-ம் ஆண்டு ஒரே நேரத்தில் நாடு முழுவதுமாக ஐந்து மொழிகளில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படம் கே.ஜி.எஃப்.

இந்தப் படத்தின் 2-ம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. வருகிற ஜனவரி 8-ம் தேதி கே.ஜி.எஃப் நாயகன் யஷ் பிறந்தநாள் என்பதால் அன்று பட வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வழங்கப்பட உள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் ஃபேக்டரி மூலம் வாங்கி வெளியிட்டார். அதேபோல் கே.ஜி.எஃப் 2 படத்தின் உரிமையையும் விஷாலே மீண்டும் கைப்பற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் கே.ஜி.எஃப்-2 படத்தின் மலையாள வெளியீட்டு உரிமையை மலையாள நடிகர் ப்ரித்விராஜ் வாங்கி உள்ளாராம். ப்ரித்விராஜின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ப்ரித்விராஜ் ப்ரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை கேரளாவில் வெளியிடுகிறது. கே.ஜி.எஃப் முதல் பாகம் ஏற்படுத்திய அதிர்வலையால் கே.ஜி.எஃப் 2-ம் பாகத்துக்கு நாடு தழுவிய பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Trending

Exit mobile version