சினிமா செய்திகள்

48 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் ஆணழகன் பிரசாந்த்: மணப்பெண் யார்?

Published

on

ஆணழகன் என்ற திரைப்படத்தில் நடித்தது மட்டுமின்றி உண்மையாகவே ஆணழகன் என்று திரையுலகில் வர்ணிக்கப்பட்டவர் நடிகர் பிரசாந்த் என்பது தெரிந்ததே. இவருக்கு தற்போது 48 வயதாகும் நிலையில் அவர் இரண்டாம் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜனின் மகன் பிரசாந்த், வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இன்றைக்கு அஜித்-விஜய் அளவுக்கு வந்திருக்க வேண்டிய பிரசாந்துக்கு குடும்ப வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டது. இவரது மனைவி கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததாக தெரியவந்ததை அடுத்து மனைவியை விவாகரத்து செய்த பிரசாந்த் அதன்பின்னர் மனக் குழப்பங்கள் காரணமாக திரை உலகிலிருந்து விலகி இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது தான் அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தற்போது 48 வயதில் இருக்கும் பிரசாந்த் திருமணம் செய்ய போவதாகவும் உறவினர் பெண் ஒருவரை நிச்சயம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version