சினிமா செய்திகள்

புதுச்சேரி அரசு சார்பில் பார்த்திபனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது!

Published

on

புதுச்சேரி அரசு சார்பில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்காக பார்த்திபனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.

பார்த்திபன் நடித்து இயக்கி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு. இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ஆஸ்கர் விருதும் பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக குல்லி பாய் என்ற படம் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது புதுச்சேரி அரசு சார்பில், ஒத்த செருப்பின் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருது பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது. புதுச்சேரி அமைச்சர் ஷாஜகான் இவ்விருதை வழங்க, பார்த்திபன் அதனை பெற்றுக் கொண்டார்.

பின்னர் பேசிய பார்த்திபன், தற்போது ஆஸ்கர் விருதை பெறுவதற்காக ஒரு திரைப்படத்தை உருவாக்க முயற்சி செய்து வருவதாகவும், அந்தப் படம் முழுமையும் சிங்கிள் டேக்கில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version