சினிமா செய்திகள்
நடிகர் மன்சூர் அலிகான் தனியார் மருத்துவமனையில் அனுமதி: கொரோனாவா?
தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலிகான் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் என்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு நடிகர் மன்சூர் அலிகான் தோல்வியடைந்தார். அந்த தொகுதிகள் அமைச்சர் வேலுமணி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்த மன்சூர் அலிகான் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் பெற்றார். இந்த நிலையில் தற்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் சென்னையில் சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
https://twitter.com/CholanMu/status/1391630892397830145
மன்சூர் அலிகானுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்று ஒரு சிலரும், கிட்னியில் கல் அடைப்பு என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர். இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் விரைவில் மன்சூர் அலிகானுக்கு ஏற்பட்ட உடல் நலக்கோளாறு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டவுடன் தான் அவருக்கு என்ன பாதிப்பு? என்பது குறித்து தெரியவரும்.
நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவால் அமைந்தகரை பில்ரோத் மருத்துவமனை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.
கிட்னியில் பெரிய சைஸ் கல் அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட,, உடனடியாக ஆம்புலன்சில்
ஏற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.PRO கோவிந்தராஜ் pic.twitter.com/1qzuM40icW
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) May 10, 2021