தமிழ்நாடு

நாம் தமிழரிலிருந்து விலகிய மன்சூர் அலிகான் புதிய கட்சி ஆரம்பித்தார்!!

Published

on

நாம் தமிழர் கட்சியில் இருந்த நடிகர் மன்சூர் அலிகான், அக்கட்சியிலிருந்து விலகி ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ என்னும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் பல ஆண்டுகளாக தனித்துப் போட்டியிட்டு வந்தவர் மன்சூர் அலிகான். அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் தொகுதியின் வேட்பாளராக களமிறங்கினார். அப்போது பல்வேறு நூதன முறையிலான பிரச்சாரத்தில் ஈடுபட்டு கவனம் ஈர்த்தார் மன்சூர். மேலும் அரசியல் குறித்தும் அவர் தொடர்ந்து பரபரப்பான கருத்துகளைக் கூறி வந்தார்.

இந்நிலையில் இன்று அவர் புதிய கட்சியைத் தொடங்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு களம் காண தயாராகி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது வரை தனக்கு தொகுதி ஒதுக்காத வருத்தத்தால் புதிய கட்சியை மன்சூர் அலிகான் தொடங்கி இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version