சினிமா செய்திகள்

பையா-க்கு பிறகு ‘பொன்னியின் செல்வன்’னில்தான் இது நடக்கிறது: கார்த்தி

Published

on

‘பையா’ படத்திற்குப் பிறகு ‘பொன்னியின் செல்வன்’ படத்தில்தான் இது நடக்கிறது என இதன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேசி இருக்கிறார்.

அவர் பேசியிருப்பதாவது, “வெறும் ஆசையோடு வந்த என்னை எந்த கேள்வியும் கேட்காமல் சேர்த்துக் கொண்டார் மணிரத்னம் சார்.

இதுவரை தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகாத ஊர்களின் தியேட்டர்களில் எல்லாம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

நான் கைதி படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது அவரிடம் இருந்து அழைப்பு வந்தது வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாயா என்றார், நான் சிவாஜி கணேசன் வசனங்கள் எல்லாம் பேசி நடித்துக் காட்டினேன்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சார், கமல் சார் பேசினார்கள், அது இப்போது தான் புரிகிறது மணிரத்னம் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும்.

Karthi in Paiya

பையா திரைப்படத்திற்கு எனக்கு நிறைய காதல் கடிதங்கள் வந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் எனக்கு நிறைய மெசேஜ் வருகிறது என்றார்.

seithichurul

Trending

Exit mobile version