சினிமா செய்திகள்
ஜெய்க்கு வந்த ஆசையைப் பாருங்க..!
ஜெய் தமிழ் திரையுலகில் ஹீரோவாக, இசையமைப்பாளாராக வலம் வந்து கொண்டிருந்தார். இப்போது அவருக்கு வில்லனாகும் ஆசை வந்து விட்டது.
இசை குடும்பத்தில் பிறந்த ஜெய் லண்டனில் முறைப்படி இசைப் பயின்றார். அவரின் பெரியப்பா தேவா தான் இசை பயில எப்போதும் உறுதுணையாக இருந்ததாக சமீபத்தில் கூறியிருந்தார். பகவதி படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தொடந்து பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.
ஜெய்யின் காமெடி மிக இயல்பாக இருக்கும். கலகலப்பு 2, கோவா, சென்னை 62006 போன்ற காமெடி படங்களும் ராஜாராணி, திருமணம் எனும் நிக்கா, வாமனன் என பல காதல் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜெய்க்கு தனி அடையாளமும் தனக்கென ரசிகர்களைக் கொண்டுள்ளார்.
தற்போது ஜெய் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நான் ரொம்ப பிஸி எனும் படத்தை இயக்கியவர் பத்ரி. இப்படம் சமீபத்தில் தீபாவளியன்று சன் டிவியில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை அடுத்து, பத்ரியின் இயக்கத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கிறார். ஜெய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
ஜெய்க்கு வில்லன் கதாப்பாத்திரம் செட் ஆகுமா என குழப்பங்களும் அவரை வில்லன் கெட்டப்பில் பார்க்கும் ஆர்வத்துடனும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்