சினிமா செய்திகள்
சைக்கிளில் சென்ற பிரபல ஹீரோவிடம் செல்போனை பறித்த மர்ம நம்பர்கள்!
கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்று காலை அவர் சைக்கிளிங் செய்துகொண்டு இருக்கும் போது அவரது செல்போனை பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை காலை நேரத்தில், சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் கவுதம் கார்த்திக் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது கவுதம் கார்த்திக்கை வழிமறித்த இரண்டு விஷமிகள், அவரது சைக்கிளில் இவர் பொருத்தி வைத்து இருந்த செல்போனை இருவர் பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கவுதம் கார்த்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 2 பேரையும் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் என்ன போன் போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதுவே படமாக இருந்தால், ஹிரோ சைக்கிளில் சென்றே அந்த செல்போன் திருடர்களை அடித்து உதைத்து இருப்பார். இதுதான் திரைக்கும் நிஜத்துக்கும் உள்ள வித்தியாசம்.