இந்தியா

ஜாமினில் வெளிவந்த பிரபல நடிகர் திடீர் மரணம்: கொலையா? என விசாரணை!

Published

on

டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்திய போது திடீரென ஏற்பட்ட கலவரம் குறித்த வழக்கில் தொடர்புடைய பிரபல நடிகர் ஒருவர் திடீரென சாலை விபத்தில் மரணம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லியில் மத்திய அரசின் புதிய வேளாண் கொள்கையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அந்த போராட்டத்தின் போது திடீரென கலவரம் நடந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த விவசாயிகள் பேரணி கலவர வழக்கில் தொடர்புடையவர் என பிரபல நடிகர் திலீப் சிங் சித்து என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாமினில் வெளிவந்த நிலையில் இன் டெல்லியில் நடந்த சாலை விபத்தில் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாகவும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி செங்கோட்டை விவசாயிகள் பேரணி கலவர வழக்கில் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதால் இது கொலையா? அல்லது தற்செயல் விபத்தா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version