சினிமா செய்திகள்

சூர்யாவின் ‘அஞ்சான்’ பட நடிகர் கொரோனாவுக்கு பலி!

Published

on

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ‘அஞ்சான்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் தினமும் கொரோனாவுக்கு பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் திரையுலகையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை. நேற்று கேவி ஆனந்த் அவர்கள் கொரோனாவுக்கு பலியான செய்தி திரை உலகையே உலுக்கியது என்ற நிலையில் தற்போது ‘அஞ்சான்’ படத்தில் நடித்த பிக்ரம்ஜித் கன்வர்பால் என்பவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான இவர் தமிழில் ‘அஞ்சான்’ திரைப்படத்தில் சமந்தாவுக்கு தந்தையாகவும் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார். இவர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வயது 52 என்பதும் இவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் குறிப்பிடதக்கது. பிக்ரம்ஜித் கன்வர்பால் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Trending

Exit mobile version