டிவி
ஷிவானியால் தான் என் மனைவியைப் பிரிந்தேனா?- முதன்முறையாக நடிகர் அஸீம் விளக்கம்
![shivani- Azeem - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/shivani-Azeem.jpg)
ஷிவானியால் தான் நடிகர் அசீம் தன் மனைவியை விவாகரத்து செய்தார் என்ற செய்திக்கு முதன்முறையாக நடிகர் அசீம் விளக்கம் கொடுத்துள்ளார்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ஷிவானி- அசீம் ஜோடி புகழ் பெற்றனர். அதன் பின்னர் இருவரும் இணைந்து ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடியது பலருக்கும் இவர்கள் காதல் ஜோடிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியது.
அதன் பின்னர் மீண்டும் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் இவர்கள் இணைய நிச்சயமாக இது காதல் தான் என சமுக ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கின. அதன் பின்னர் மனைவியை பிரிவதாக நடிகர் அசீம் அறிவித்தார். ஒரு குழந்தைக்கு தந்தையான அசீம் தற்போது மனைவியை விவகாரத்து செய்திருப்பதே ஷிவானியை திருமணம் செய்யத்தான் என்ற செய்தி வைரலாகப் பரவியது.
இதற்கு முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார் நடிகர் அசீம். அசீம் கூறுகையில், “எனக்கு ஷிவானிக்கும் தொழில்முறை சார்ந்த உறவைத் தவிர வேறு எந்த உறவும் கிடையாது. நான் மனைவியை விவாகரத்து செய்தது எங்கள் இருவர் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம். இதை வைத்து நான் ஷிவானியை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் எனக் கூறும் செய்தியில் உண்மையில்லை. அந்தப் பெண்ணை வேலை பார்க்க விடுங்கள். என் சொந்த வாழ்க்கையில் தலையிடாமல் என்னையும் வேலை பார்க்கவிடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.