சினிமா செய்திகள்

நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா; வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்!

Published

on

தமிழ் திரையுலகில் ஏற்கனவே ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் ஒரு சிலருக்கு கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழ் திரையுலகை ஹீரோக்களில் ஒருவரான அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து நடிகர் அதர்வா முரளி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நான் வீட்டில் என்னை நானே தனிமை படுத்துக்கொண்டேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன், விரைவில் நான் குணம் ஆகி விடுவேன் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா காரணமாக அதர்வா நடிக்க வேண்டிய திரைப்படங்களின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version