சினிமா
மன உளைச்சல்…வேதனை!…காவல்துறைக்கு நன்றி…ஆர்யா உருக்கம்…
ஜெர்மனியை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் வித்ஜா என்பவரை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா கூறி அவரிடம் இருந்து ரூ.71 லட்சம் பணம் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கை தற்போது மத்திய குற்றப் பிரிவினர் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். நடிகர் ஆர்யாவை நேரில் வரவழைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. ஜெர்மனி பெண் வித்ஜாவிடம் ரூபாய் 71 லட்சம் பெற்றதை ஆர்யா பகிரங்கமாக மறுக்கவில்லை என்பதால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போலீசாரின் விசாரணையில் சென்னையை புளியந்தோப்பு பகுதியில் வசிக்கும் முகமது அர்மான் ஆர்யாவை போல் அப்பெண்ணிடம் பேசி மோசடி செய்தது தெரியவந்தது எனவே, அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஹூசைன் என்பவரையும் கைது செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கதில் போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ள ஆர்யா ‘சொல்ல முடியாத வேதனையில் இருந்தேன்.. என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கும், காவல்துறைக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
I would like to thank Commissioner of Police @chennaipolice_
Additional Commissioner of Police-Central Crime Branch and
Cyber Crime Team of Chennai city for arresting the Real culprit. It was a real mental trauma which I never expressed. Love to everyone who believed in me ????— Arya (@arya_offl) August 24, 2021