சினிமா செய்திகள்

தனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும், மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும்; கருணாஸின் சாதி அமைப்பு புகார்!

Published

on

நடிகர் தனுஷ் இப்போது பரியேறும் பெருமாள் இயக்குநர், மார் செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

1991-ம் ஆண்டு மணியாச்சியில் நடைபெற்ற சாதி கலவரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு காட்சியில் தனுஷ் மணியாச்சி காவல் நிலையத்தை அடித்து நொறுக்குவது போன்ற படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இதை போன்ற வன்முறையான படங்களை எடுக்க அனுமதியளிக்கக் கூடாது. எனவே, தனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும், மாரி செல்வராஜைக் கைது செய்ய வேண்டும் என்று கருணாஸ் அவர்களின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பிடமிருந்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version