சினிமா

‘கே.ஜி.எஃப்3’ அடுத்து ராக்கி பாய் எடுத்த அதிரடி முடிவு; ரசிகர்கள் ரியாக்‌ஷன் என்ன?

Published

on

’கே.ஜி.எஃப்3’ படத்தை அடுத்து நடிகர் யஷ் எடுத்துள்ள முடிவுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில், கன்னடத் திரையுலகிற்கு புதுவெளிச்சம் பாய்ச்சிய படங்களில் ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இதில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடிகர் யஷ் நடித்திருந்தார். பிராஷாந்த் நீல் இயக்கி இருந்தார். இதுவரை வெளியான இரண்டு பாகங்களும் கிட்டத்தட்ட 250 கோடிக்கும் அதிகமான வசூலை உலக அளவில் பெற்றது. இதற்கடுத்து இந்தப் படத்தின் மூன்றாம் பாகமும் விரைவில் வெளியாக இருக்கிறது என படக்குழு தெரிவித்துள்ளது. ’கே.ஜி.எஃப்’ படத்திற்காகவே பல வருடங்கள் தனது தோற்றத்தை மாற்றாமல் இருந்தார் நடிகர் யஷ்.

இந்த நிலையில், ‘கே.ஜி.எஃப்’ படத்தின் மூன்றாவது பாகத்தை முடித்து விட்டு பாலிவுட்டில் கவனம் செலுத்த இருக்கிறார் நடிகர் யஷ். இதுநாள் வரையில் கன்னடத்தில் மட்டுமே படங்கள் நடித்து வந்த யஷ் ‘கே.ஜி.எஃப்’ படத்திற்கு பிறகு உலக அளவில் கவனம் பெற்ற நடிகராக மாறியுள்ளார். இதனால், பாலிவுட்டிலும் நேரடியாக படங்கள் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இதனால், இவரது மார்க்கெட் உலக அளவில் இன்னும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் படங்கள் குறித்தான அறிவிப்பை யஷ் தரப்போ அல்லது படக்குழு தரப்போ அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம். யஷ்ஷின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version