Connect with us

சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி!

Published

on

நடிகர் விஜய் சேதுபதியின் குடும்பத்தினர் மற்றும் பெண் குழந்தை பற்றி, ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பாண்டிய ராஜன் உறுதியளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியது.

இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே, தமிழின பற்றாளர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் எதிர்த்து வந்தனர். ஆனால், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் வரை பிரச்சினை ஆகவில்லை. ஆனால் ஃபர்ஸ்ட் லுக் வெளியான பிறகு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. செய்தி தொலைக்காட்சிகளில் விவாதமாகவே இந்த விவகாரம் வந்தது.

அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் விஜய் சேதுபதியை அந்த படத்திலிருந்து விலகுமாறும் கோரிக்கை வைத்தனர். அதே நேரம் சில நடிகர், நடிகைகள் அவருக்கு ஆதரவாகவும் பேசினர்.

அதே நேரம் சமூக வலைத்தளத்தில் ஆசாமி ஒருவர், விஜய் சேதுபதி குடும்பத்தினர் மற்றும் அவரது பெண் குழந்தை பற்றி ஆபாசமாகப் பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நடிகை ரோகிணி உள்ளிட்டவர்கள் சம்மந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டிய ராஜன், “விஜய் சேதுபதியை 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று அதிமுகவும் கேட்டுக்கொண்டது. அவரும் தற்போது விலகியுள்ளார். அவரது குடும்பத்திற்கு ஆபாச கொலை மிரட்டல் விடுத்துள்ள ரவுடி கைது செய்யப்படுவார். அவர் சமூக வலைத்தள ரவுடி தான். கண்டிப்பாகச் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதே போன்று அண்மையில், தோனியின் மகள் மீதும் ஆபாச மிரட்டல் விடுத்த நபர், குஜராத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா16 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!