இந்தியா
கட்டுக்கட்டாக பணத்தை தண்ணீர் பைப்புகளில் ஒளித்து வைத்த பொதுப்பணித்துறை அதிகாரி!
கர்நாடக மாநிலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் உள்ள தண்ணீர் வரும் பைப் லைனில் பணக்கட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தான் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பலர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர்.
அந்த வகையில் பொதுப்பணித்துறை ஜூனியர் இன்ஜினியர் ஒருவர் வீட்டில் சோதனை செய்த போது பல இடங்களில் தேடியும் எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து திடீரென வித்தியாசமாக பைப்லைன் ஒன்று இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் அந்த பைப்பை வெட்டி எடுத்து பார்த்தபோது அதன் உள்ளே கட்டுக்கட்டாக பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலிருந்து ஒருவர் குச்சியால் பணத்தை தள்ளிவிட கீழேயுள்ள வாளியின் மூலம் அந்த பணம் சேகரிக்கப்பட்டது என்பதும் அதனை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பைப்லைனில் இருந்து தண்ணீருக்கு பதில் பணமழை கொட்டியதை பார்த்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர் என்பதும், இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Literally "Pipeline Money" ????
(Video is from Karnataka. House of PWD engineer was raided by ACB) pic.twitter.com/aKyvpi68pO— Facts (@BefittingFacts) November 24, 2021