தமிழ்நாடு

ஓபிஎஸுக்கு வெளிநாட்டில் சிகிச்சையா? அவசர அவசரமாக டெல்லிக்கு ஏன் சென்றார்?

Published

on

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை அவசர அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இதன் பின்னணியில் அவர் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்ல உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்னும் சில தினங்களில் வேலூர் தொகுதிக்கான மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்க உள்ளது. இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை 6.55 மணிக்கு தனிப்பட்ட பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின் பின்னணி என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

துணை முதல்வர் ஓபிஎஸ் ஏற்கனவே முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அவர் விரைவில் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாகவும் அது சம்பந்தப்பட்ட பணிகளை கவனிக்கத்தான் அவர் டெல்லிக்கு நேற்று மாலை அவசர அவசரமாக சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version