சினிமா செய்திகள்

பிக்பாஸ் காயின் ஏற்படுத்தும் திடீர் திருப்பம்: அபிஷேக் அடுத்த வார கேப்டனா?

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பஞ்சதந்திரம் என்ற டாஸ்க்கில் காயின்களை எடுக்க வேண்டும் என்று போட்டியாளருக்கு வழங்கப்பட்டதை அடுத்து குழு குழுவாக இணைந்து காயின்களை கைப்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த காயின்களை அதிகமாக வைத்திருப்பவர் நாமினேஷன் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் அல்லது தனக்கு விருப்பமான ஒருவரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று பிக்பாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய அறிவிப்பின்படி நாமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்வது மட்டுமன்றி அடுத்தவாரம் தலைவராகவும் இந்த காயின்களை வைத்திருப்பவர் மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார்

கேப்டனுக்கான டாஸ்க்கில் ஒருவர் வெற்றி பெற்று கேப்டனாக மாறினால், இந்த காயின்களை வைத்து அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தன்னை கேப்டனாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் அல்லது தனக்கு விருப்பமானவரை கேப்டனாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் பிக்பாஸ் தெரிவிக்கிறார்

இப்போதைக்கு இந்த காயின்கள் நிரூப், பாவனி, இசைவாணி, வருண், மற்றும் தாமரை ஆகியோர்களிடம் உள்ளது. இந்த ஐந்து பேருமே அபிஷேக்குக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அடுத்த வாரம் கேப்டனாக அபிஷேக் மாறி விடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version