சினிமா செய்திகள்

இந்தியாவின் உயர்ந்த கட்டடத்தில் வாங்கிய வீட்டை விற்ற அபிஷேக்- ஐஸ்வர்யா தம்பதி!

Published

on

இந்தியாவின் மிக உயர்ந்த கட்டடத்தில் வாங்கிய வீட்டை திடீரென அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் தம்பதியர் விற்றுள்ளனர்.

மும்பையில் உள்ள வார்லி என்னும் பகுதி மிகவும் பணக்காரர்கள் மட்டுமே வாழும் செழிப்பான இடம். இந்தப் பகுதியில் ஓபராய் 360 மேற்கு என்னும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் உள்ளது. கட்டடம் ஏ, கட்டடம் பி என இரண்டு கட்டடப் பிரிவுகளாக இருக்கும் இந்த ஓபராய் கட்டடம் தான் இந்தியாவின் மிக உயர்ந்த கட்டடம் ஆகும்.

கட்டடம் ஏ 56 மாடிகளைக் கொண்ட நட்சத்திர ஹோட்டல் ஆகும். கட்டடம் பி என்பது 90 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு பகுதி. இந்த பி பிரிவில் தான் 7,000 சதுர அடியிலான ஒரு வீட்டை கடந்த 2014-ம் ஆண்டு சுமார் 41 கோடி ரூபாய்க்கு அபிஷேக் பச்சன் வாங்கினார். 32-வது மாடியில் 4 கார் பார்க்கிங் உடன் இந்த வீடு வாங்கப்பட்டது. இன்னும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதுமாகக் கட்டி முடிக்கப்படவில்லை.

அதற்குள்ளாகவே இங்கு வாங்கிய வீட்டை அபிஷேக் பச்சன் 45 கோடி ரூபாய்க்கு தற்போது விற்றுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த கட்டடத்தில் வீடு வாங்கியுள்ளனர். இந்தியாவின் உயர்ந்த கட்டடம் என்ற பெருமைக்குரிய இடம் என்பதால் பல பணக்காரர்களும் இங்கு வீடு வாங்கியுள்ளனர். இந்த சூழலில் அபிஷேக் எப்படி, எதற்காக இந்த வீட்டை விற்றார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

 

seithichurul

Trending

Exit mobile version