சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் இருந்து நாளை எலிமினேட் ஆகப்போறவர் இவர்தான்!

Published

on

பிக் பாஸ் வீட்டில் இருந்து நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்படுவார்கள் என்ற நிலையில் நாளை வெளியேறும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்பட்டார்கள் என்றும் அவர்களில் சிலர் வெற்றி பெற்றதன் காரணமாக காப்பாற்றப்பட்டார்கள் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் இந்த வாரம் மூலம் சிபி, நிரூப், சஞ்சீவ், தாமரை, அமீர் ஆகியோர் காப்பாற்றப்படடனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் இருப்பவர்கள் அபினய், பிரியங்கா, பாவனி, வருண், அக்சரா மற்றும் ராஜூ ஆகிய ஆறு பேர்கள் உள்ளனர்.

இந்த 6 பேர்களில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் நாளை வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி வருண் மற்றும் அபினய் ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாலும் இந்த வாரம் அபினய் வெளியேற உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே அபிநய் கடைசி நேரத்தில் நூலிழையில் தப்பித்து வந்த நிலையில் இந்த வாரம் அவர் வெளியேற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version